“லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம்”- விஜய்
Aug 15, 2026, 09:00 IST
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம்தான் என முதலமைச்சர் விஜய் கூறினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிய பின் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “சமூக நீதி அடிப்படையில் வெளிப்படையான, உண்மையான, நிர்வாகமாக செயல்படுகிறோம். பொதுவாழ்வில் சமரசம் இருக்க கூடாது. மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் தவெக செயல்படுகிறது. தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம்தான். அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழலை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. காவல்நிலையங்களும் மக்களுக்கான சேவை மையங்களாக மாறும். ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.