சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் விஜய் அறிவிப்பு..!
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துகடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் பிரதான சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த தனபால் (வயது-37), த/பெ. கந்தசாமி, மேனகா (வயது-35), க/பெ. தனபால் மற்றும் இவர்களது உறவினர்களான மேனகாவின் சகோதரியின் மகளான சினேகா (வயது-23), தனபாலின் மகளான கனிஷ்கா (வயது-17) மற்றும் தனபாலின் மகனான செல்வன்,
சுர்ஜித் (வயது-12) ஆகிய ஐந்து நபர்கள் வாகன எண் TN-30-DZ-9734 என்ற Cruiser ரக காரில் பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் (வயது-39), த/பெ. முருகேசன் என்பவர் வாகன எண் TN-29-BU-4402 என்ற சரக்கு லாரியை, பல்லடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்த நிலையில், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்த இடத்தில் மேற்படி Cruiser காரின் மீது மோதியதன் காரணமாக, 1) தனபால் 2) மேனகா 3) சினேகா மற்றும் 4) கனிஷ்கா ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் சுர்ஜித் என்பவர் படுகாயமடைந்து முதலுதவி அளிக்கப்பட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுர்ஜித் என்பவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.