×

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

 

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆளுநரை யாரும் கரைபடுத்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது ஆளுநரின் பதிவுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ளது.