×

அண்ணாவின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணாவின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்!
 என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். சென்னை வாலாஜா சாலையில் இருந்து தொடங்கிய அமைதி பேரணி அண்ணா சதுக்கத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பொன்முடி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.