×

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனரமைக்கப்பட்ட ஆனந்தன் பூங்காவை திறந்து வைத்து, திரு.வி.க. நகர் பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணி மற்றும் 20 மறுசீரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (12.9.2023) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இன்று தான்தோன்றி அம்மன் கோயில் தெருவில் 11 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட ஆனந்தன் பூங்காவை திறந்து வைத்து, 6 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி மற்றும் கொளத்தூர் பகுதியில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 20 மறுசீரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தார்.