அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல் கலாமின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
Oct 15, 2023, 13:37 IST
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரின் நினைவாக அவரது முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது நினைவு நாளான இன்று அந்த சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அப்துல் கலாமின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.