×

திருப்பத்தூரில் சாலை விபத்தில் 7 பேர் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த 8-9-2023 அன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (11-9-2023) சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் நிறுத்தி சரி செய்து கொண்டுருந்தனர். அப்போது இதில் பயணித்த அமர்ந்திருந்தனர். அப்போது பயணிகள் நிறுத்தப்பட்ட பின்னால் வந்த லாரி வாகனத்தின் முன் மினி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பழுதடைந்த வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த திருமதி. செல்வி (6T) சேட்டம்மாள், க/பெ.பழனி (வயது 55), திருமதி.மீரா, க/பெ.முனுசாமி (வயது 51), திருமதி.தேவகி, க/பெ.சண்முகம் (வயது 50), திருமதி.கலாவதி, க/பெ.குப்புசாமி (வயது 50), திருமதி.சாவித்ரி, க/பெ.குப்பன் (வயது 42), திருமதி.கீதாஞ்சலி, க/பெ.ரஞ்சித் (வயது 35) மற்றும் திருமதி.தெய்வானை, க/பெ.திலிப்குமார் (வயது 32) ஆகிய ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.