×

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

 

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பேச பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.