×

பிரதமர் மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார். சந்திப்பின்போது காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம், ஜி எஸ் டி நிலுவைத் தொகை, புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மதியம் 12 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் வாயிலாக டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை இரவு 7.30 மணிக்கு மத்திய
 

டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார். சந்திப்பின்போது காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம், ஜி எஸ் டி நிலுவைத் தொகை, புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை மதியம் 12 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் வாயிலாக டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். மேலும், பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறவுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு மோடியை எடப்பாடி பழனிசாமி, அழைப்பு விடுக்க உள்ளதாகவும், தேர்தல் குறித்து பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.