×

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த முதியவர் கைது

 

ஜெயங்கொண்டம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் தனது தோட்டத்தில் இலந்தப்பழம் மரம் வளர்த்து வருகிறார். மரத்தில் பழம் பறிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த 8 வயது மற்றும் 6 வயது சிறுமிகள் எலந்த பழம் பறிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது இளங்கோவன் 8 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நீண்ட நேரம் அழுது கொண்டிருந்ததை பார்த்த சிறுமியின் பெற்றோர் விசாரித்துள்ளனர். சிறுமி கூறியதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளங்கோவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்தனர்.