“அரசு சுரங்கங்களை கையில் எடுத்த முதலமைச்சர் விஜயின் நண்பர்”.. உதயநிதி குற்றச்சாட்டு..!
Updated: Sep 7, 2026, 12:45 IST
சட்டப்பேரவையில் இருந்து இன்று (செப்.7) வெளிநடப்பு செய்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் விஜயின் நண்பரும் ஆலோசகருமான விஷ்ணு ரெட்டி, அவரது மச்சான் சுஜய் ரெட்டி, பிஸ்னஸ் பார்ட்னர் அனில் ரெட்டி.இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் அரசு நடத்தும் சுரங்கங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடுவேன். இதற்கான ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்” என்றார். அவரது இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | "அன்னைக்கு ஓட்டப் பந்தயம்.. இன்னைக்கு ஒப்புவித்தல் போட்டி.." -உதயநிதி ஸ்டாலின்#SunNews | #TNAssembly | #Vijay | @Udhaystalin pic.twitter.com/JykZTfIUCI
— Sun News (@sunnewstamil) September 7, 2026