×

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி!

தமிழக ஆளுநரை சென்னை ராஜ்பவனில் இன்று மாலை முதல்வர் பழனிசாமி சந்திக்கவிருக்கிறார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகியும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். அதனால் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இதனால் சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை,
 

தமிழக ஆளுநரை சென்னை ராஜ்பவனில் இன்று மாலை முதல்வர் பழனிசாமி சந்திக்கவிருக்கிறார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகியும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். அதனால் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இதனால் சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை, 7.5% ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் 303 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என பலர் ஆளுநருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில், சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் பழனிசாமி ஆளுநரை இன்று மாலை நேரில் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பு சென்னை ராஜ்பவனில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் நடக்கவிருக்கிறது.