×

உருமாறிய கொரோனா : கட்டுப்பாட்டை அதிகரிக்க முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

முதல்வர் பழனிசாமி வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.இருப்பினும் பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் கடந்த மாதம் ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை விதித்துள்ளார். இந்நிலையில் | உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம்
 

முதல்வர் பழனிசாமி வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.இருப்பினும் பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் கடந்த மாதம் ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் | உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா என ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் லண்டனில் இருந்து நேற்று டெல்லி வழியாக சென்னை வந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.