×

பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!

பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து 25.10.2020 முதல் 3.3.2021 வரை தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து 25.10.2020 முதல் 3.3.2021 வரை 130 நாட்களுக்கு விநாடிக்கு 20 கன அடி வீதம் மொத்தம் 224.64 மி.க. அடிக்கு மிகாமல் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட பாசன
 

பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து 25.10.2020 முதல் 3.3.2021 வரை தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து 25.10.2020 முதல் 3.3.2021 வரை 130 நாட்களுக்கு விநாடிக்கு 20 கன அடி வீதம் மொத்தம் 224.64 மி.க. அடிக்கு மிகாமல் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட பாசன நிலங்களின் முதல் போக பாசத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.