4வது நாளாக மருத்துவமனையில் முதல்வர்.. அஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்..
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 4வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி சென்றபோது ஏற்பட்ட திடீரென தலைச்சுற்றல் ஏற்படவே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்குப் பின் மருத்துவமனையில் இருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்தும், அதுதொடர்பான பணிகள் குறுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இருப்பினும் 4வது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் தொடர் சிக்கிசையில் இருந்து வருகிறார். இன்னும் இரண்டு அல்லது 3 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பரிசோதனையில் எந்தவொரு அடைப்பும் இல்லை என்றும் தெரிவித்தார். ஆஞ்சியோ பரிசோதனைக்குப் பிறகு முதலமைச்சர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் ; ஒரு பிரச்சனையும் இல்ல என்றும், முதலமைச்சர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்களே சொல்வார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.