×

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் -  7 மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து!!

 

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு கேரளா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  "இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை சென்னை , நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 44- வது சர்வதேச சதுரங்கப் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்கள். இத்தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  சார்பில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.

 கேரள மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன் அவர்கள், மாண்புமிகு அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு. பெமா காண்டு அவர்கள்,  சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் அவர்கள் ஆகியோர் இச்சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும்,  கர்நாடக மாநில முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை அவர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவர்கள்,  தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவர்கள், ஹரியானா மாநில முதலமைச்சர்  மனோகர் லால் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் இச்சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.