×

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு!

 

சென்னையில் பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை பறித்துச் சென்ற மர்ம நபரின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வானகரம் பகுதியில் அடுகுமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில், அதில் பலர் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர், வீடுகளை நோட்டமிட்டவாறு ஒரு வீட்டின் ஹாலிங் பெல்லை அழுத்துகிறார். அப்போது ஒரு வீட்டில் இருந்து பெண் வெளியே வந்த நிலையில், அந்த பெண்ணை தாக்கி அந்த மர்ம நபர் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.