×

சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,286 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,286 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். மேலும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார்.