போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதாந்திர உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோட்டையை முற்றுகையிட மாற்றுத்திறனாளிகள் திட்டமிட்டிருந்தனர். இதனிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர். கோட்டையை நோக்கி செல்ல முயன்ற மாற்றுத் திறனாளிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே கைது எய்யப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு பரிசீலிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அரசாக திமுக அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிக மாற்றுத்திறனாளிகளை சேர்த்தது தமிழ்நாடுதான் என கூறினார்.