×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடங்கியதில் இருந்து சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கொரோனா விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 428 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 13,776 ஆக அதிகரித்துள்ளது.