×

மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும்  8 மீனவர்கள் - மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை!!

 

ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 
முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் மீனவர்களின் அவலநிலையைக் குறிப்பிட்டு, அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.