ஏப். 1 முதல் சுங்கசாவடிகளில் பணம் வசூலிக்கப்படமாட்டது - ஒன்றிய அரசு
Updated: Feb 20, 2026, 19:27 IST
ஏப். 1 முதல் சுங்கசாவடிகளில் பணம் வசூலிக்கப்படமாட்டது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை இலவச சுங்கச்சாவடிகளிலும் ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக நிறுத்துவது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக பத்திரிகை தகவல் பணியகம் (PIB) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026, ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் FASTag இல்லாத வாகனங்கள் ரொக்கம் செலுத்தி கடக்க முடியாது. மாறாக UPI மூலம் மட்டுமே 1.25 மடங்கு அபராதத்துடன் கட்டணம் செலுத்தி கடக்க வேண்டும்.