×

முதல்வருக்கு பறந்த புகார்- அன்பரசன் மீது நில அபகரிப்பு புகாரில் வழக்குப்பதிவு

 

திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜியை தொடர்ந்து தா.மோ. அன்பரசன்  போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். நில ஆக்கிரமிப்பு செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள 5,500 சதுர அடி தனியார் நிலம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக அலுவலகமாக 6 மாத குத்தகைக்கு எடுக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குத்தகை காலம் முடிந்தும் இடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ப்பட்ட நபரின் முகவரி போலியானது என்றும்,  இதுவரை எந்த வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும், நிலத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்ள முயற்சி நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் PCM Sons நிறுவனத்தின் ராஜேஷ் சோமசுந்தரம் முதல்வரிடம் புகார் அளித்து இருந்தார்.
 

இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது வாடகைக்கு பெற்ற இடத்தை அபகரிக்க முயற்சித்ததாக 
ராஜேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.