×

தென்காசியில் போலீசார் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் மரணம் : 2 காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு !

சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசார் தாக்கப்பட்டதில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் தென்காசியில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. தென்காசி மாவட்டம் வி கே புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன். இவர் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் இவரை அடித்ததாக தெரிகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட குமரேசன் நெல்லை அரசு மருத்துவமனையில்
 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசார் தாக்கப்பட்டதில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் தென்காசியில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

தென்காசி மாவட்டம் வி கே புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன். இவர் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் இவரை அடித்ததாக தெரிகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட குமரேசன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக பலியானார். இதனால் அப்பகுதி மக்கள் வீரகேரளம்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குமரேசனின் தந்தை நவநீதகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் குமரேசன் இறப்பு தொடர்பாக எஸ்.ஐ. சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.