நயன்தாரா ஆவணப்படத்தில் சந்திரமுகி படக் காட்சிகளை தடை செய்யகோரி வழக்கு
நயன்தாரா ஆவணப்படத்தில் சந்திரமுகி திரைப்படக் காட்சிகளை தடை செய்யகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா ஆவண படத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்க வேண்டும் என படத்தின் காப்புரிமை பெற்ற ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்டயீடு கேட்டுள்ளது. இதுதொடர்பாக 2 வாரங்களில் ஆவண பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடதக்கது.