×

கேன் வாட்டர் விற்பனை தாறுமாறாக அதிகரிப்பு- எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை

 

சுட்டெரிக்கும் கோடை வெயில் எதிரொலி காரணமாக கேன் வாட்டர் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முறையாகப் பின்பற்றுமாறு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு வழங்கி உள்ளது.

முறையான அனுமதி, அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, குடிநீர் சுத்திகரிப்பு முறைகளை முழுமையாகப் பின்பற்ற குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை விதிகள் படி சூரிய ஒளி முன்னிலையில் குடிநீரை தேக்கி வைக்கக் கூடாது, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை வெளிப்படையாக அச்சிடுவது, தொடர்ந்து மாதந்தோறும் குடிநீரின் தரத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி கண்காணித்து அறிக்கையை தயார் நிலையில் வைத்துக் கொள்வது, கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லிகிராம் என்ற அளவில் கடைப்பிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் கட்டாயம் பின்பற்றுவது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.


குடிநீரில் TDS குறையும் பட்சத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் ஏற்பட கூடும்.எனவே குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் குடிநீர் சுத்திகரிப்பில் முறையான வழிகாட்டுதல்கள் பின்பற்றுவது அவசியம், மேலும்  குடிநீர் கேன்களை  30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும், கேன்களின் நிறம் மாறிடும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்,  விதிகளை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரிவாக ஆய்வு நடத்தி குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் , விற்பனை கடைகளில் நடவடிக்கை எடுக்கும்படி வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.