×

இடைத்தேர்தல்- பாஜக தேர்தல் பணிக்குழு

 

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவானது வருகின்ற அக்டோபர் 6ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அவர்களை வெற்றி பெறச் செய்ய தமிழக பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணி செய்ய உள்ளது. இந்த இடைத்தேர்தல் பணிகளை கருத்தில் கொண்டு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கீழ்கண்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.