×

பேருந்தில் சென்ற தம்பதியருக்கு கொரோனா உறுதியானதை அறிந்த சகபயணிகள் அலறியடித்து ஓட்டம்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 2,710பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,112ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பேருந்தில் சென்ற தம்பதியருக்கு கொரோனா உறுதியானதை அறிந்த சகபயணிகள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். கொரோனா பரிசோதனை செய்துக்கொண்ட தம்பதியர் அரசு பேருந்து ஒன்றில்
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 2,710பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,112ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பேருந்தில் சென்ற தம்பதியருக்கு கொரோனா உறுதியானதை அறிந்த சகபயணிகள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். கொரோனா பரிசோதனை செய்துக்கொண்ட தம்பதியர் அரசு பேருந்து ஒன்றில் சென்றபோது செல்போனில் வந்த தகவலை அறிந்த பேருந்து நடத்துனர் உள்பட அனைவரும் பேருந்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்துள்ளனர்.