×

பைக் மீது பேருந்து மோதி விபத்து - கணவன், மனைவி பலி

 

பெரம்பலூர் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள வடகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலாஜி(35) சித்ரா தம்பதியினர். இவர்கள் இருவரும் இன்று வேப்பந்தட்டையில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக வடகரையில் இருந்து  இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு வேப்பந்தட்டை நோக்கி வந்துள்ளனர். இவர்களது வாகனம் வெண்பாவூர் காப்புக்காட்டு பகுதியில் வந்தபோது எதிரே பெரம்பலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிசெல்லும் அரசு பேருந்து மீது நேருக்கு நேர்மோதி விபத்துக்குள்ளகி யுள்ளது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி பாரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த கைகளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும்விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் சின்னதம்பி என்பவரிடம்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.