×

முத்துராம லிங்க தேவரின் உருவப்படம் எரிப்பு : 3 பேர் கைது!

பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவம் தேனியில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி காளிநாயக்கர் புளியமரத் தெருவில் முத்து ராமலிங்கரின் பழமையான உருவப்படம் ஒன்று பல ஆண்டுகளாக அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இதை மர்ம நபர்கள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதை நேற்று காலை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தி போலீசார் அதே பகுதியை சேர்ந்த
 

பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவம் தேனியில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி காளிநாயக்கர் புளியமரத் தெருவில் முத்து ராமலிங்கரின் பழமையான உருவப்படம் ஒன்று பல ஆண்டுகளாக அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இதை மர்ம நபர்கள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதை நேற்று காலை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தி போலீசார் அதே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்தனர். சமூக பிரிவினை மோதலில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது .

மேலும் அங்கு வேறேதும் அசம்பாவிதம் நடந்திடாத வண்ணம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அங்குள்ள முத்து ராமலிங்கர், இமானுவேல் சேகரன் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.