×

#BREAKING : சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் கோரிக்கை..!

 

சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது என ஈசிஆர் சரவணன், தவெக எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 7 ஊராட்சிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலும், 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இடம் பெற்றுள்ளதால், பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் அலைந்து அவதியடையும் சூழ்நிலை நிலவுவதாகக் சுட்டிக்காட்டினார்.

எனவே, பொதுமக்களின் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு சோழிங்கநல்லூரைத் தனி மாவட்டமாகவோ அல்லது தனி மாநகராட்சியாகவோ மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.