×

#BREAKING: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும்.. இபிஎஸ்..!!

 

புதிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி...

 

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்.

 

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2000.

12ம் வகுப்பு வரை படித்து காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8000ல் இருந்து 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

நடைபாதை வியாபாரிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1,400 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.