×

#BREAKING : பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு.! இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்..!

 

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அன்புமணி வெளியிட்டார்.

இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை தியாகராயர் நகர் 10, திலக் தெருவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (01.04.2026) 11.00 மணிக்கு தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியகியது.

இந்நிலையில்  சற்று முன் தேர்தல் அறிக்கை வெளியானது. 

1. தமிழ்நாட்டில் 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

2. படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்.

3. அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

4. பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

5. போதை மற்றும் புகைப் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கொண்டுவரப்படும்.

6. போதைப் பொருள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 10,000 பரிசு.

7. 1 டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.

8. நெல் முதல் எள் வரை, பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்து வேளாண் பொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.

9. பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

10. ரேஷன் கடைகளில் 2கிலோ நாட்டு சர்க்கரை வழங்கப்படும்.

11. வேளாண் துறை மார்க்கெட்டிங் செய்ய புதிய அமைச்சர் பதவி உருவாக்கப்படும்.

12. தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு 1 வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

13. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்.

14.தமிழ்நாட்டின் 2வது தலைநகரமாக திருச்சியை மாற்றுவோம்.

15.குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.

16.100 நாள் திட்டத்தை 150 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

17.அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்படும்.

18.ஞாயிற்றுக்கிழமையில் ரூ.25-க்கு அசைவ சாப்பாடு வழங்கப்படும்.

19.ரூ.10-க்கு மக்கள் சாப்பாட்டு திட்டம் தொடங்கப்படும்.

20.அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி நிறுவப்படும்.

21.நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.