×

#BREAKING தங்கம் விலை ஒரு சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது

 

வரலாறு காணாத உச்சமாக தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக உயர்ந்துள்ளது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மே மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து காணப்படுகிறது. நேற்று முன் தினம்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளி விலை முதல்முறையாக கிலோ ரூ.1 லட்சத்தைக் கடந்தது; ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1.01 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.