×

#BREAKING: ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!!

 

இன்று சட்டப்பேரவை கூடியது. முதலாவதாக பழம்பெரும் திரைப்பட நடிகை செளகார் ஜானகி மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வாசித்தார். சௌகார் ஜானகி மறைவுக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் அந்த சிலிண்டர்களுக்கான தொகை பயனர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் பண்டிகை அன்று தொடக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.