#BREAKING : ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வீட்டில் ரூ. 14 லட்சம் பறிமுதல்..!
Apr 21, 2026, 12:50 IST
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சுந்தரராஜ் வீட்டருகே சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 14 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை சோதனைக்குச் சென்ற பொழுது தூக்கி வீசப்பட்ட சூட்கேசில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 14 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.