×

வாய்தகராறில் காதலியை அடித்துக்கொன்ற கள்ளக்காதலன் கைது!

வாய்தகராறில் காதலியை கள்ளக்காதலன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பாப்பாத்தி காட்டுபுதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவரும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் இவர்கள் அதேபகுதியில் திருமணம் செய்யாமல் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். கூலித் தொழிலாளிகளான இவர்கள் கர்நாடக மாநிலம் ராமநாதபுரத்திற்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளனர். வனப்பகுதி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் போது
 

வாய்தகராறில் காதலியை கள்ளக்காதலன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பாப்பாத்தி காட்டுபுதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவரும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் இவர்கள் அதேபகுதியில் திருமணம் செய்யாமல் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

கூலித் தொழிலாளிகளான இவர்கள் கர்நாடக மாநிலம் ராமநாதபுரத்திற்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளனர். வனப்பகுதி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் போது கள்ளக்காதலர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாய் தகராறு முற்றிப்போகவே ராஜியை விஸ்வநாதன் அடித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அந்தியூர் போலீசார் விஸ்வநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.