×

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் – 7 பேருக்கு மறுவாழ்வு தந்த நெகிழ்ச்சி

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த வெங்கடேஸ்வரன்- விஜயலட்சுமி தம்பதியின் மகன் ரோகித் கண்ணா (17) இவர் கடந்த 31 ஆம் தேதி பொள்ளாச்சி-பல்லடம் சாலை விபத்தில் சிக்கினார், இதில் படுகாயமடைந்த ரோகித் சிகிச்சைக்காக கோவை கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய ரோகித் குடுபத்தினர் முன்வந்தனர். இதையடுத்து ரோகித் கண்ணாவின் இதயம்,
 

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த வெங்கடேஸ்வரன்- விஜயலட்சுமி தம்பதியின் மகன் ரோகித் கண்ணா (17) இவர் கடந்த 31 ஆம் தேதி பொள்ளாச்சி-பல்லடம் சாலை விபத்தில் சிக்கினார், இதில் படுகாயமடைந்த ரோகித் சிகிச்சைக்காக கோவை கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய ரோகித் குடுபத்தினர் முன்வந்தனர்.

இதையடுத்து ரோகித் கண்ணாவின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பின்னர், கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் கே.ஜி மருத்துவமனை நோயாளிகளுக்கும், கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கும் , இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் தானமாக அளிக்கப்பட்டது. இதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.