×

திருவள்ளூரில் கடந்த 20 நாட்களில் 11 பாலியல் வழக்குகள்- வானதி சீனிவாசன்

 

திருவள்ளூரில் கடந்த 20 நாட்களில் 11 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூரில் கடந்த 20 நாட்களில் 11 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கிறது. அத்துடன், ஒரு நாளில் மட்டும் சென்னை, ஓசூர், தேனி, தென்காசி என மாவட்ட வித்தியாசமின்றி பல இடங்களில் போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ள செய்தி தமிழகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.