×

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

 

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பான பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக  பத்ரி சேஷாத்ரி மீது, IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்தும் பத்ரி சேஷாத்ரி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், பத்ரி சேஷாத்ரி கைதுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சிறந்த பேச்சாளர் ,கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரியை கைது செய்திருப்பதன் முலம் அறிவாலயம் அரசு கருத்து சுதந்திரத்தையும் , ஜனநாயகத்தையும் தமிழகத்தில் புதைக்க தயாரானது தெரிகிறது. பத்ரி சேஷாத்ரி கைது நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறேன். இம் மாதிரி நடவடிக்கைகள் மு.க.ஸ்டாலின் அரசின் தோல்வியை திசை திருப்பும் முயற்சி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.