×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

 

BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக, ₹4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டத்தை அந்த நிறுவனத்துக்கே மீண்டும் வழங்கியதற்காக, தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் மீதும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு துணை மின்நிலையத்தை அமைப்பதற்காக BGR Energy நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட  ஒரு சிறிய ஒப்பந்தத்தை, பணியை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ரத்து செய்துள்ளது. இதுபோன்ற  ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக் கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு மின்சார வாரியம்  தயாராகி வருகிறது என்றும் அறிகிறோம்.  அப்படியானால், BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக, ₹4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டத்தை அந்த நிறுவனத்துக்கே மீண்டும் வழங்கியதற்காக, தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் மீதும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.