×

2 ஆண்டுகளுக்கு முன் ரூ.59 லட்சம் நிதி ஒதுக்கீடு! ஆனால் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை- அண்ணாமலை

 

 

தமிழகம் முழுவதும் உள்ள சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களைக் கணக்கெடுத்து, அவை அனைத்திற்கும் சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், தமிழகத்தின் பல மலைக் கிராமங்கள், சாலை வசதி இன்றி இருக்கின்றன. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஈசல்திட்டு மலைக் கிராமத்தில், சாலை வசதி இல்லாததால், மணியன் என்ற இறந்தவர் உடலை, கரடுமுரடான மலைப் பகுதியில், தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் காணொளி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.  உடுமலைப்பேட்டை பகுதியில், பல மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் பல ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு, அடிப்படை வசதிகள் கூட இதுவரை செய்து தரப்படவில்லை. இதுவரை இவர்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை. பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், போராடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ரூ. 59 லட்சம் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சாலை அமைக்கப்படவில்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்குச் சான்று.