×

 அதிமுக - பாஜக கூட்டணி 39% வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது- அமித்ஷா

 

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி 39% வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் உரையாற்றிய அமித்ஷா, “அதிமுக - பாஜக கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல; தமிழகத்தை முன்னேற்றுவதற்கான கூட்டணி. வரப்போகும் தேர்தலில் திமுக-வை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏ.-வின் வெற்றியை அறிவிக்க வேண்டும். சோனியா காந்திக்கு ஒரே லட்சியம், ராகுல் காந்தியை பிரதமராக்குவதே கனவு. அதேபோல திமுக-விற்கு உதயநிதியை முதல்வராக்குவதே கனவு. இந்த இரண்டுமே நடக்காது; இந்த இரு இடங்களிலுமே (பிரதமர் - முதல்வர்) என்.டி.ஏ. கூட்டணியே வெற்றிபெறும். தமிழக அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பல மாதங்களாக சிறையில் இருந்துள்ளனர்; அவர்கள் ஆட்சியாளர்களாகவும் இருக்க வேண்டுமா? தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி 39% வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது.

130-வது சட்டத்திருத்தத்தை 'கறுப்பு சட்டம்' என்கிறார் ஸ்டாலின்; அதை சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் அவர் கறுப்பு நடவடிக்கைகளை செய்பவர். சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி. மாநிலங்களவையில் அடுத்த கூட்டத்தில் அவைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பார்” என்றார்.