×

#Justin பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தமிழ்நாடு பயணம் ரத்து!!

 

 பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்தாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் 12 கோடி ரூபாய் செலவில் 7 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று மாலை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு கலைஞர் சிலை , அவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. முத்துவேலர் நூலகத்தை, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வியும், கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திறந்து வைக்கவுள்ளனர்.  .

இந்நிலையில் உடல்நிலை சரி இல்லாததால்  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழகம் பயணம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது.  திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்க இருந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இந்த சூழலில் திடீர் உடல்நலக் குறைவால் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்றும்  கருணாநிதி நினைவேந்தல் திறப்பு விழா கூட்டத்தில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவுள்ளார் என்றும் விளக்கமளித்துள்ளார்.