×

#BIG NEWS : ஈரான் - USA போர் நிறுத்த அறிவிப்பால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது..!!

 

ஈரான் போர் பதற்றம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை எகிற தொடங்கியது.

தமிழகத்தில் தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.13,860-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஏப்., 08) ஒரு கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ரூ.14,200-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600-க்கும் விற்கப்படுகிறது.

அதே போல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,65,000-க்கும் விற்கப்படுகிறது. ஈரான், அமெரிக்க போர் நிறுத்தம் காரணமாக தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது