×

#BIG BREAKING : கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் தர்ணா..!

 

கோவை தெற்கில் பணப் பட்டுவாடா என்று குற்றம் சாட்டி அதிமுக வேட்பாளர் தர்ணா செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது தொகுதியில் அத்துமீறி பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். வேட்பாளரின் இந்த திடீர் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.