×

மனைவி மீது சந்தேகம்: குழந்தைக்கு எலி பேஸ்ட் கொடுத்த கணவர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே எலி பேருந்தை சாப்பிட்ட குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரைச் சேர்ந்த சத்தியபிரபு என்பவரது மகள் இரண்டரை வயது குழந்தை ஆராதனா, கடந்த ஒன்றாம் தேதி எலி மருந்தை சாப்பிட்டதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்ட அவரது பெற்றோர், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று ஆராதனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தனது கணவர் சத்தியபிரபு,
 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே எலி பேருந்தை சாப்பிட்ட குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரைச் சேர்ந்த சத்தியபிரபு என்பவரது மகள் இரண்டரை வயது குழந்தை ஆராதனா, கடந்த ஒன்றாம் தேதி எலி மருந்தை சாப்பிட்டதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்ட அவரது பெற்றோர், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று ஆராதனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் தனது கணவர் சத்தியபிரபு, தன் மீது உள்ள சந்தேகத்தின் பேரில் குழந்தைக்கு எலிபேஸ்ட் கொடுத்ததாக மனைவி நிவேதா, கீழவளவு காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து சத்திய பிரபு மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.