"அழகு முத்துக்கோனின் வீரத்தையும், விடுதலைவேட்கையையும் போற்றுவோம்" - அன்புமணி ட்வீட்!!
மாவீரன் அழகுமுத்துக்கோனின் 313-ஆவது பிறந்தநாளில் அவரது வீரத்தையும், விடுதலை வேட்கையையும் போற்றுவோம் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பாகவே ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டு இந்தியாவின் முதல் விடுதலைப் போரை நடத்திய கட்டாளங்குளம் மன்னன் வீரன் அழகுமுத்துக்கோனின் 313-ஆவது பிறந்தநாள் இன்று.
மண்ணையும், மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வேன்; எந்த தியாகத்தையும் செய்வேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் வீரன் அழகுமுத்துக்கோன். வரும் 19-ஆம் நாள் அவரது 266-ஆவது நினைவுநாள் என்பதால், அதுவும் இன்றே குருபூஜையாக கடைபிடிக்கப்படுகிறது. புனிதமான இந்த நாளில் மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரத்தையும், விடுதலைவேட்கையையும் நாம் அனைவரும் போற்றுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.