×

“ECR-ல் அந்த காரை பிடிடான்னு அவரு சொன்னாரு... அதனால் தான் பெண்களை மடக்கி பிடிச்சேன்”- கைதானவர் வாக்குமூலம்

 

கானாத்தூரில் பெண்கள் காரை நள்ளிரவில் துரத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரின் பகீர் வாக்குமூலம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவறுதலாக பெண்களின் காரை துரத்தி சென்றதாகவும், பிறகு மன்னிப்பு கேட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த கானாத்தூரில் நள்ளிரவில் பெண்களின் காரை துரத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் சந்தோஷ், தமிழ் குமரன், அஷ்வின், விஷ்வேஸ்வர், முக்கிய நபர் சந்துரு ஆகிய ஐந்து பேரை இதுவரை கானாத்தூர் போலீசார் செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் முக்கிய நபரான சந்துரு வாக்குமூலம் அளிக்கக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவத்தன்று தனது கார் ரிப்பேர் ஆனதால், எழும்பூரில் உள்ள கடையில் வாங்க சென்றதாகவும், அதன் பின்னர் இரண்டு காரில் கல்லூரி மாணவர்களுடன் தானும் சந்தோஷும் கடற்கரைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.