×

ஈபிஎஸ் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் பாதுகாப்புக் கோரி முறையீடு

 

எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனு மீது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


சிவகங்கையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடை பெற உள்ளது. இந்நிலையில் இந்த பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம் எல்ஏ  சார்பில்  ஐகோர்ட் கிளை பதிவாளர் முன் ஆஜராகி இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஜி. இளங்கோவன் வீடியோ கான்பரன்சில்  விசாரித்தார்.  அப்போது மனுதாரர் தரப்பில் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஈபிஎஸ் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


அரசுத் தரப்பில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சில இடங்களில் போஸ்டர்களை கிழித்த்துள்ளனர். இது தொடர்பாக இதுவரையே யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனாலும் போலீசார் தரப்பில் தேவையான அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி கூடுதல் போலீஸ் பாதுகாப்புக் கோரும் மனுவை சிவகங்கை போலீசார் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.